Monday, 17 September 2012


நானே தோற்றமும்...
தோன்றியவனும் ஆனேன்.
தானே தோன்றுதலும்,
தோன்றுதலும் தானே....,?!

வேண்டுதல்கள்
வேண்டி கிடக்கின்றன
வேண்டுதல்கள்
யாவென்று?
மறதியை
மறக்க முடியாமல்
தான்
மறுபடியும்
நிகழ்கின்றன
மரணம்.
மன்னிக்கவும்
ஜனனம்.


நாணயம் இல்லாததால்
நாணல்
இந்த நான்.
அறுந்து  போகவே  பற்றி பார்க்கிறேன் .-
தோற்றுப்போகவே வெற்றி  தேடுகிறேன்.-
தலை சுற்றிப் பார்க்கவே
நான் கற்றுப் பார்க்கிறேன்.
எம்மதமும் சம்மதம்
ஆனால் சம்மதம் எம்மதம்?
அம்மதம் அம்மணம்! அதாவது நிர்வாணம்.
ஆதலால் நிர்வாகி - வானம்.
ஆம்,அது - ஞானம்!.

அவனை  சுமந்தால்
அவனுக்காக!
அவன்
இப்பொழுது
அவர் ஆகிறார்..,
காரணம் -
இவன்
இவர் ஆக வேண்டுமே,
ஆதலால்.
எல்லா அப்பனுக்கும்
இதுவே ஜாதகம்!
எல்லா ஜாதகத்திற்கும்
அதுவே காரியம்
எல்லா காரியத்திற்கும்
அவனே தோரணம்
எல்லா தோரணங்களும்
அவனாலே  மாறனும்.!
மாறுதல்கள் மாற வேண்டி
மாற்றங்கள் மாறி கொண்டே
இருக்கின்றன மாறாமல்.








என்னவோ?
என்ன தேவையோ ?
தேவைக்கு..?
தேவைஇல்லாமல்
தேவைகள்
தேவைப்படுவதில்லை.
ஆம் தேவைகள்
உருவாகுவதில்லை
உருவாக்கப்படுகிறது.,
இப்ப கேள்வி
உருவாக்கத்திற்கு
என்ன?
தேவை என்பதே..!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1dTYFG-sEDMb4mQPprBJNrfZr8-V4Fw5bVki6FtxPrdtHXJ_9kkzMcLpab7PDq5MyUN5mrY_TT-lQV2Na6Z9UyiMTl9440B2FyVxLN2TAde-arWI01fuGQbUuCoMpYlOKhIz5qx1eHVI/s320/29122011863.jpg

ஒன்று, இரண்டாகும் பொது பன்மையாம்.
ஒன்றுக்குள்- ஆயிரம் பன்மை என்று பண்படாத வரை.



அறிவில்லாததே அறிவு.
இல்லை
அறிய முடியாததே அறிவு.

நாணம் அற்ற பின் நாணயம் ஏது?
எல்லாம் வார்த்தைகள்
அவ்வளவே


அவ்வளவும்.
அறிந்த பின்
அறியாததே ஞானம்

கூடுதல்,
கூடுவதால்
கூடியதும் கூட்டமாக...
கூடுவதுவும் கூட்டமாக.
மாயம் என்பதில்
மரணம் மட்டுமே அர்த்தப்படுகிறது.

தவம்.
பிடிவாதத்தின் கெளரவச்சொல்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9k_3zP95y4wdPbZh8BKgvzckKzalcqNCzkiArSfRa2bHz0jypVnymlkSN-3yDQ03ZMP5TBW2wwU2Ifg3KdDCzauk_N6roMDjKz6khBzXqlXeFEoXFlb8vKLim613ovCMOIgTJxoTIGTQ/s320/44.bmp

தேக உணர்ச்சிகளின்
தெளிவான
சுயநலம்.
ஆண்-பெண்.
வரம்=  கிடைக்கும், முன் நிலை தவம்.
தண்டனை =   கிடைத்த பின் நிலை சிறை.
தவமும் சிறையும் முறையே ...
முறையானவையல்ல
முழுமையானவை.
தனக்கே
தனக்கென ஒர்ந்திருக்கும்போழுது.
தனக்குத்தானே கண்டுபிடித்து
தன்னைத்தானே தொலைக்கும் பொழுது,
தவமும் சிறையும்
வெற்று வார்த்தைகளே.
. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTS41ELcEhpdVfGwBQPBsj-K8GOpq7PcxToV-7dduJtquvHKml_SCSlOFgEtb3SQqa6FFR5p5G2gWAVDt950ad7gBIGSapESrxV3Gwsu7OJI2wcM7XVnZ3qBcv-ZUOeMD4bYIiRnPVSeg/s320/Photo+on+2010-12-09+at+09.41.jpg


                              what next??

Sunday, 9 September 2012

சமன் படுத்த பட வேண்டியே பல சந்தர்ப்பங்கள்...இங்கு சம்பிரதாயங்களாக.ஆம் சடங்குகள் என்பது நிகழ்ந்து விட்ட நிகழ்வுகளின் அனுபவங்களைக் கொண்டு
நிகழவிருக்கும் நிகழ்வுகளை எதிர் நோக்கும்சத்திய பிரமாணமே...இந்த சடங்கு சம்பிரதாயங்கள்.ஆனால்கடந்து விட்ட அனுபவச்சுழல்களாக...பொதி சுமக்கும்
கழுதைகளாக...செக்கு மாட்டின் மரபினனாகிய...இன்றைய சூழலில் அபரிமிதங்களின் செழிப்பையும்
உணராமல் படைப்பாற்றலின் மகத்துவமும் மறந்து
வெற்றுக் குப்பைகளை பதியம் இட்டு வேற்றுமை
உரங்களில் பெருமை பயிர்வளர்க்கும் பேரியக்க பேராற்றலின் பெருந்திரளான
துகள்களே...பெருமையின் சிறப்புகளைக் கொண்டு உணர்வுகளின்
உண்மைகளைஆராதிப்போம்.அறிவு என்பது கடந்த கால நிகழ்வுகளின்
நினைவு பட்டியல்.அதாவது.தகவல்
பரிமாற்றத்திற்கான சைகைகள், விழி

அசைவில் இருந்து அங்க அசைவுகளாக மாறி 
பின் சப்தங்களில் அதாவது அலறல்களில் 
உணரப்பட்ட அவ்வோசைகளை ஒழுங்கான
வடிவத்திற்குள் கொண்டு வந்து
மொழியென்றும் பின்னாளில்
இசையென்றும்...இதுபோன்ற  
தேடலின் விளைச்சல்களுக்காக,,, 
நடந்து முடிந்துவிட்ட நிகழ்வுகளின்
நகலை சேமிக்கும்...பேரியக்கத்தின் அற்புத கொடை,இந்த அறிவு. 
அறிவென்பது நிகழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை வினைகளுக்குமான
விளைச்சல்களை அதாவது செயல்விடை காணும் செயலே...நம் அறிவு.ஆம்.
அதுவே... தேடல்.தேடலின் சரிவு நிலையே ஆராய்ச்சி.அதாவது விருப்பங்களை
விரும்பி  அவ்விருப்பதிற்கான பயணமே...நம் வாழ்வு.அதன் நுட்பமே தேடல்.
ஆனால் ஆராய்ச்சி என்பது நடந்து முடிந்துவிட்ட நிகழ்வுகளின் நகலை
சேமித்து வைத்திருக்கும் அறிவை நம்பி...நின்ற இடத்திலேயே... நிற்கும் இடத்தையே...நோண்டி நோண்டி பார்க்கும் ஊர்வன ஜாதியின் செயலே...
இந்த ஆராய்ச்சி. அதாவது உணர்வுகளின் அடிப்படையில் நம்மனதில் எழுந்த 
விருப்பங்களை நம்பாமல்... தேடல் என்ற மறுமைகளின் மீது மகத்துவம்
காணாமல்,சூழ்ந்தழுத்தும் தன் இருக்க பேராற்றல் என்ற "ஏகாத்துவ" நெறி மறந்து..,
அறிவென்றும்,அறிவியல் என்றும்,ஆராய்ச்சி என்றும் அதனால் விளைந்த கண்டு
பிடிப்புச்சாதங்களை நாம் நிகழ்த்திய பெருமை என்றும்..,வான வேடிக்கைகளில் 

பேதலிக்கும் நிலை துறப்போம்.உணர்வுகளை
போற்றுவோம்.உதாரணத்திற்கு ஒன்று
 உரைப்போமேயானால்...நீதி என்றும் தர்மம் என்றும்
இறைவனை அதாவது பேராற்றலின்அருகாமையை
உணரத்தவறிய நிலையில்,கடந்துவிட்ட
நிகழ்வுகளையும் நம் எண்ண அலைகளில் நமக்கான
தேடலின் நோக்கத்தையும் பிரித்து பார்க்க தெரியாத 
அதாவது பகுத்தறியாத நிலையில்...நிழல்களின்
உணர்ச்சியலையில்  உந்தப்பட்டு உருவானவையே
புராணங்கள்.நிகழ்வுகளின் நகலை நாகரீகக் கோமாளி
உருவம் பூண்டு,பூனை ஜாதிக்குஅதாவது கால்நடைகளுக்கு ஆராய்ச்சி மணி கட்டும்
இந்த அறிவியலும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளும்...அதாவது ஊர்வன என்ற
நிலைக்கு உயரும் முன் கூட,அதன் அடுத்த நிலையான பறப்பன நிலைக்கே உயர்வு
கொண்டு  தேட துணிந்த விட்டில் பூச்சிகளின் நிலையே அறிவிய கண்டுபிடிப்புகள்.
ஆக ஒவ்வொருநாளும் புதியது என்பதுவான பாதையில்...ஒவ்வொருவருக்கும்
தனித்தனி உலகம், தனித்தனி திறமைகள்.தனித்தனி பெருமைகள். அதாவது
நோக்கங்கள் என ஐந்தறிவும்,நம்முள்ளே பஞ்ச பூதங்களாக...என்ற பகுத்தறியும்
பேராற்றலே ஆறாம் அறிவென்னும் கொள்கை.ஊர்வன,
 பறப்பன,நடப்பன,நிலைப்பன என 
எல்லாமும் நாமேநம்மை காணும்
காட்சிகள். அனைத்துமே நம் விருப்பங்களே.
நம் வினைகளே.ஒவ்வொரு வினைக்கும் ஒரு
எதிர் வினை உண்டென்ற தத்துவமே...நம்
விருப்பத்தினால் விளைந்த,இந்த
உலகமெனும் அற்புத திரையில்
உருவங்களாக.அதாவது கதாபாத்திரங்களாக.
காணப்படுபவர்களும் காண்பவர்களும் நாமே.
இதில் முக்கியம்,அதாவது முதன்மை.ஆம் முழுமைக்கான முழு முகாந்திடத்துடன்
தெளிவோமேயானால்...மேடையில் நடிகர்கள் நடிப்பது ஒரு வாதம்.மேடையே
நடிக்கிறது!இது என் வாதம்.ஆக, மேடையை மேன்மைப்படுத்தி இயக்குவது நம்
விருப்பங்கள். இவ்வதிசயத்தக்க இந்த படைப்பாற்றலின் மகாசக்தியை,நாம்
என்றுணர்வதே...உணரும் தற்கவனமே... நன்மை k எல்லாம்.அதாவது 
காணும் அனைத்தையும் நாம் என்றறிவது.

நமதுள்ளம் தூயதாக இருக்கும் திசையில்...
குளிர் தென்றலாகவும் வருடலாம்,
சாரலாகவும் சிலிர்க்க செய்யலாம்... 
எல்லாம் நம் மனமே.மனதை நம்பும் 
நம் குணமே.குணத்தை போற்றும் 
நம் முயற்சியே. முயற்சி என்பது
இயக்கத்தை உணர்வது.உணர்வதென்பது இயக்கத்தை இயக்குவது.இயக்குதல்
என்பது தன் நிலையையே,தான் மட்டுமே,நானே இங்கு எல்லோரும், நன்மைk  
இங்கு எல்லாமும்... என இயங்குவது. இயக்கமும் இயங்குதலும் ஒன்றே.
என்பதுவே பகுத்தறிவு.பகுத்தறிவின் மாண்பே நம்,இந்த மனித உரு.
உதாரணத்திற்கு இன்னொன்று எடுத்தியம்புவோமேயானால்... ஒரு உலகம்.
அதில் ஒரு உலோகம். அதாவது இரும்பு.நம் இருப்பு சுதந்திரம்,நான் என்ற
நிலையில்...நாம் இருந்து கொண்டே இருக்கிறோம் என்று மறந்த நிலையில்
மீண்டும் அதே உலகம் அதில் ஓர் உலோகம்.அதாவது இரும்பு.அதனைக்கொண்டு  
ஒரு குடுவை செய்கிறோம்...இப்பொழுது அதன் பெயர் குடுவை.முன்னம் அதன்
பெயர் இரும்பு.இவ்வளவே இவ்வுலகத்திற்கும் உலோகத்திற்கும் உள்ள இருப்பு
நிலை. அப்படியே நமக்கும். நாம்காண்பவற்றிற்கும். மன்னிக்கவும் நமக்கும்,நாம்
படைத்தவற்றிற்குமான தொடர்பு.இந்த தொப்புள் கொடியின் பாரம்பரியம்
புரியாமல்,அதாவது பரம்பொருளின் பாரம்பரியம் உணராமல்...ஒரு கல்லெடுத்து 
கல்லை சிங்கமென்று திருத்திய பின்னொரு நாளில் அச்சிலைக்காக...
சிங்கத்திற்காக...பயந்து நடுங்கும் ஒரு நாணமில்லா பிழைச்செயலே...

நம் இந்த இன்றைய உலக வாழ்க்கை.பேதம்
களைவோம். 






நன்மை K எல்லாம்.
  நன்மை A எல்லாமும்.  
நன்மையே M பிரான்.
       நன்மை பரிமாணம்.
     நன்மையே  L லாமும்.
        நன்மையே R வது அறிவும்.
          நன்மையும்  A கத்துவமே.ஆக, 
          நன்மையில் J யித்துக்கொண்டேயிருப்போம்.
                    எண்ணம்k.