தோணுவதும் பின் தோன்றுவதும் மாயை.
மாயை
என்றுணர்ந்து அதில் மயங்குவது குற்றம். அதாவது பாவம்.பாவத்தை தெரிவித்து
மன்னிப்பு கேட்பது,இன்னொரு பாவம்.பாவத்தை உணர்ந்து வருந்துவது
பிரார்த்தனை.பிரார்த்தனை என்பது எழும் எண்ணங்களை நம்புவது.நம்பிய
எண்ணங்களுக்காக பொறுமை காப்பது.பொறுமை என்பது உணர்வது.ஒவ்வொரு கணத்திலும்
கனத்தை கவனிப்பது அதாவது விடும் மூச்சை இழுத்தும்,இழக்கும் மூச்சை
இழுத்தும் என இவ்வியக்கத்தை... இவ்வியக்க தகும் இயக்கத்தை உணர்தல். உணராமல்
இருந்த பல கணங்களுக்கு, அதாவது பாவங்களுக்கு, வருந்துவது.வருந்துவது
என்பதின் உட்கருத்து பொருளின் அடிப்படையில் பொருளை இழந்து,அப்பொருளுக்குரிய
தரத்தை நினைத்தோ சிந்தித்தோ வருந்துவதல்ல .பிழை பொறுத்தல்.அதாவது
நம்முளே இருந்து நம்மை ஆட்சி செய்து நல்லருள் புரிந்து நம்மை ஆண்டவன்
அதாவது நம்மால் நம் அறிவாள் அறிய முடியாத அந்த ஆண்டவன்,நாம் செய்த பிழை
அனைத்தும் பொருத்தும்... நமக்கின்னமும் சுகமளித்து-சுகப்பாதையில் இப்பவும்
திரும்பச்செய்து
நம்
கருணையாளனின் இருப்பிடமான நம் மனதையும் கருணை வடிவமாக கொண்டு பிறர்
செய்யும் பிழைகளை பொறுத்து சகித்து, பிறகு அதற்காகவும் வருந்துவது. ஆக
தோணுவதை-செய்யாதது குற்றம்.தோனாததை
செய்வது குற்றம். நாம் செய்கிறோம் என்ற நினைப்பு ஒரு குற்றம்.நினைவு
என்பது மற்றொரு குற்றம்.குற்றம் என குறை கூறுவதும் குற்றம்.குற்றமாக கருதி
குறைபடுவதும் குற்றம்.காரணம் குற்றம் என்பது நிகழ்ந்து விட்ட
ஒன்று.நிகழப்போகும் மற்றொரு குற்றத்திற்கான விழிப்புணர்வு வருந்துவதல்ல.
அதாவது கவனம்,அதை பெற இறைவனிடம் உள்ளுணர்வு வழியாக பொறுமை கற்பதே
முயற்சி.ஆக குற்றம் குறை கூறுவது குற்றம்.பொறுமை கற்பதே நமது வாழ்வின் அடிப்படை!அதாவது வேகத்தின் அடிப்படையில் நம் அறிவு கூறும் பொருமையல்ல.நல்லறிவாலர்களுக்
ஆனால் நம்மை நம்மால் உணர்ந்தறியும் பாக்கியம்.இந்த பொறுமையின் இறை கருணையால்...
நாம் பெறுவது பாக்கியமாகும். ஆம் நாம் எழுத முயலும் முன் நமக்கு எண்ணங்கள்
தந்து அவ்வெண்ணங்களை ஓசையாக்கி..அதனை ஒரு மொழியாக்கி.... என இத்தனை
பாக்கியமிக்க,மொழியின் அர்த்தங்களை உணராமல்,வெறும் எழுத்தை
எழுதுவோமேயானால்...அது வெற்று காகிதத்தை அழுக்காகும் முயற்சி. இறை
உணர்வுடன் நாம் எழுதுகிறோமோ...? யாருக்காக எழுதுகிறோம்...? ஏன்?எழுத
வேண்டும்?நான் எழுத,எது தூண்டியது?அப்படியாயின்...அது மற்றவர்களுக்கும்
ஏற்புடையது தானே. அப்பணி இறைபணி. நம் கடமை இறைதன்மை பேணிக்காப்பதேயாகும்.
ஆக உள்ளுனர்வழியாக ஊற்றெடுக்கும் நமது சிந்தனையை அடைகாப்பதே.நம்
ஞானகுஞ்சு வளம் பெற சிறக்கும்.நம்முயற்சி என்பது
மற்றொரு இயக்கத்தின் அடிப்படையில் அப்படி இருக்க,முயற்சிக்கு வெற்றி
என்பது,நிலவில்லாத வானத்தில் அதாவது அமாவாசையில் நிலவில்லை என்று கூறுவது
போல். நமக்கில்லை.அதாவது அமாவாசையில் நிலவை காணும் சக்தி நமக்கில்லை. அது
போலவே முயற்சி என்பதும்... முயற்ச்சிக்கு வெற்றி என்பதும் வெற்றியின்
எதிர்நிலை தோல்வி என்பதும் தோல்வியால் வருத்தமும் பின் விரக்தியும் ஆக நம்
மனம்.
அதாவது
இறை இருப்பிடமான அக்கருவூலத்தில் குப்பைகளை,அதாவது மாயைத்தனமான மடமை
அழுக்குகளால் வேண்டாதவைகள் எல்லாம் வேண்டும் என்ற பிற்போக்குதானமே
முயற்சி என்பது.அதாவது பிறர் இதை படிக்க நேர்ந்தால்..அது கூட
இதன்னடிப்படையே, இது என்னுள்ளே எனக்கறிவிக்கும் என் இறைவனின் வார்த்தைகளை
அதாவது சத்தியத்தை கற்றுக்கொள்வதற்காக...
நான் செய்யும் ஒரு
முயற்சி இதுவும் பிற் போக்குத்தனமானவைகளில் முதலாவது தான்.ஆக, அதாவது நாம்
வாழ நமக்கு தேவையான முதல்- மூச்சு காற்று பின் நீர் பின் உணவு இவ்வளவே
அடிப்படை.அதன் பின் நமக்கேற்படும் தினவும்,தினவிற்க்கு பல ரசனைகளும், ரசனைக்கேற்ப
நறுமணங்களும்,சிலிர்க்க வைக்கும் நீரோடை,மெல்லிய காற்று என அனைத்தும் நம்
எந்த முயற்சியின்றி எப்பொழுதும் நமக்காக நம்மருகே வேண்டா
விடினும்.அப்படியிருக்க நாம் முயற்சி செய்வது... எதற்காக?என்ற முதல் கேள்வியே.. இறைவன் நமது பிழை பொறுத்தளினால் வந்த கொடையாகும். அதாவது இப்பொழுது நமக்கிருக்கும் இச்சிந்தனை கேள்வி இருப்பதை அனுபவிப்பதே சுகமாகும்.அப்படியிருக்க அனுபவிப்பதற்காக..
இருப்பதை தொலைப்பது எவ்வாறு சுகமாகும்?சுகம்
என்ற சத்தியத்திற்கு நாம் கொண்ட பொருளே தவறு.அதாவது மாயமான மடமைகளில்
சிக்கி உழன்ற காரணத்தால் நம் அறிவு நமக்கு கூறும் சுகம் என்பது,மற்றவரை
பழிப்பது. அதாவது கௌரவம் என்ற அடிப்படையில். மற்றவர்களை தாழ்த்துவது,பொறாமை
என்ற அடிப்படையில். எதிர்ப்பது,திறமை
என்ற அடிப்படையில். மற்றவர்களை அழிப்பது,பாதுகாப்பு என்ற அடிப்படையில். ஆக
இந்த அடிப்படையனைத்தும் மாயை என்பதே இதன் பொருள். அதாவது அடிப்படை இல்லாதது மாயை.அடிப்படை அறிய முடியாதது இறை. ஆக பசி என்பதும் ருசி என்பதும் நமக்காக நம் இறைவன் நமக்களித்த பாக்கியங்களான நமது சந்தோஷ சுகங்களின்..அடிப்படை நம்பிக்கை இந்த பசியும்,ருசியும். ஆக இப்பசியும் ருசியுமே..இவ்வியக்கத்தின் வித்தாகும்.
இவ்வியக்கத்தகும்
வித்தை நமக்கு விருப்பமக்குவது நமதெண்ணங்கள்.நமதெண்ணம் என்பது பசியாகவும்,
ருசியாகவும்,பின் அலங்காரமாகவும், நாகரீகமாகவும் நம்மை பண்படுத்தவே,அதை
விடுத்து.நம் முயற்சி என்ற போர்வையில் நாம் முயல்வதென்பதோ,இவ்வியற்க்கைக்கு
எதிரானது. அதாவது சேமித்தல்.நாளை என்ற நம்பிக்கையின் மீது அதாவது
எண்ணங்களால் நம்மை ஆட்சி செய்யும் நம் இறைவனை நம்பாமல்...
செய்யாத...செய்யப்படாத அருவருக்கத்தக்க செயல் அதாவது சேமிப்பு.
ஆக சத்தியத்தின் பாதை தவறாக மாறும் பொழுது மாற்றப்படும் பொழுது மாயையின் ஆட்சி நம் எண்ணங்களை குழப்ப எதிர்படுகிறது. அதாவது நாம் என்ற நாம்... நானாக,மாறுவதன் முதல் முயற்சியே சேமிப்பு. நாளை நமக்கானது என்பதை விடுத்து நாளை எனக்கு மட்டும் என்ற குறுகிய மனப்பான்மை அதாவது கருணை வடிவமான
அந்த காணமுடியா மனதில் இருக்கும் அருட்கொடையாளனின் தன்மை குறைந்து நான் வெறுமனே நானாக மாறி நானாக முயற்சி செய்கிறேன். வரப்போகும் பசிக்காக நான் இன்று உழைக்கிறேன். அப்படி உழைக்கும் பொழுது உணரவேண்டிய ருசியை மறந்து உழைக்கிறேன்.வந்த பசியை மதிக்காமல் உழைக்கிறேன்.இப்படி முயற்சி என்ற கௌரவம், அடிப்படை இல்லாத
பிற்போக்குத்தனமான நம்பிக்கையின் மீது அவநம்பிக்கை கொண்டு அர்த்த மற்ற தத்துவத்தை.. தரித்திரத்தை... சாத்தியமாக்கி அதனுள்ளே ஏமாந்து கொண்டிருப்பது, மன்னிப்பே இல்லாத பாவம். ஆக
பிழை என்பது ஒன்றே அது முயற்சி.இதுவே மாயை இது ஒழிய அனைத்து பாவமும்
நீங்கும். முயற்சி என்பது அனைத்து பாவத்தையும் உள்ளடக்கியது.நான்
சம்பாதிக்கிறேன்.என் பணம் அதாவது என் சொத்து.எனக்கு பல அடிமைகள்
தேவைபடுகிறார்கள்.எனது அன்றாட பணியில் இருந்து என் உடலின் அனைத்து உவமானங்களுக்கென பல அடிமைகள். அடிமைகளின் பெயர் காதல்-காமம்-வெற்றி-தோல்வி-துரோ கம்-குரோதம்-பழி-பொய்-கொலை-பேரா சை.இப்படி
இந்த அடிமைகளை நமக்கு நாம் பெறுவது நம் முயற்சியில்.பின் அந்த அடிமைகளின்
அடிமையாய் நாம் மாறுவதுஎன்ற இந்த நன்றி கெட்ட தனத்தின் காரணமாக நன்னடத்தை
இழந்து,இழந்ததும் தெரியாமல்... புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்
செயல்களை மன்னித்தும் நமக்கு வாழ எல்லாவிதமான சௌவ்கரியங்களுக்கும்
குறைவில்லாமல்.. இன்னமும் நம்மை மன்னித்தருளும் இறைவனின் கருணையை
என்னவென்று சொல்வது.ஆக நாம் பாவம் உணர்ந்து பிறகு விட வேண்டியது.நம் முயற்சி
என்ற மாயை பின் நமக்கிருக்கும் பாக்கியங்களுக்காக நாம் பிரார்த்திப்பது. பிரார்த்தனை என்பது வேண்டுவன அல்ல ! தியானிப்பது அல்ல ஏன்? அது ஒரு செயலே அல்ல.பிரார்த்தனை என்பது நிலைத்திருப்பது. ஒன்றியிருப்பது .சார்ந்திருப்பது.எதனோடு? யாரோடு?என்ற கேள்விகள் எழாத பதிலோடு. நாம்
அறிந்து கொள்வது அறிவாள் தான் யாரும் மறுக்க முடியாது.காரணம் நேற்று
நம்முடைய அனுபவமே இன்று நம்முடைய அறிவாகப்படுகிறது.அறிதல் என்பது அறிந்து
கொண்டேயிருக்கும் ஒரு அற்புத சக்தி.அறிந்து கொண்டிருக்கும் இயக்கம்
தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருத்தல் அறிவாகும்.இதில் அனுபவம் என்பது நமது
அறிவாள் அதாவது கவனத்தை திசை திருப்பும் ஒரு முயற்சியே.அதாவது
பாவச்செயலாகும்.காரணம் அனுபவம் என்பது அறிதலை அடிப்படையாக கொண்ட எல்லா
ஜீவராசிகளுக்கும் பொதுவானது. வேறுபாடானது.மாறுபட்டது. ஏன்,அனுபவம்
பிறருக்கு அறிவுரையாக மாறும் பொழுது என் கவனம் அதாவது என் அறிதல் என்ற
இயக்கம் முதலில் தடைபடுகிறது,இரண்டாவது கேட்பவருக்கும் தடைபடுவதோடு ஒரு
ஏக்கம் அதனால் அது பணிவோ,கருத்து வேறுபாடோ எதுவோ என்றறியாமலே அறிவுருத்தியவனுக்கு ஒரு பெருமையாகவோ அல்லது கர்வமாகவோ...
இப்படி
இத்தியாதிகளில்...எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் கவனம் மாறுவது.
நம்மை படைத்த நம் இயற்க்கைக்கு அதாவது அந்த மாபெரும் கருணையாளனுக்கு நாம்
எதிர்பட்டவர்களாகிறோம்.இதை எஜமான் தொழிலாளி என்று வர்க்கப்படுத்தி பேதமை கொண்டலும்,படைப்பாளன் என்று பகுத்தறிவாளனாலும்,தந்தை-மகன்
என அர்த்தம் கொண்டாலும்.கொண்டிருக்கப்பட்டு கொண்டிருக்கும் இப்படி எல்லா
சூழலிலும் நம் கவனம் அதாவது நம்முடைய அந்த மாபெரும் அறிவு வீணடிக்கப்பட்டு
கொண்டிருக்கிறது.அதாவது அறிதல் என்ற இயக்கம் ஏன்? எதற்கு? என்று தெரியாத
சூழலில் நாம் தெரிந்து அர்த்த படுத்தி கொண்டிருக்கிற நம் குறிக்கோள்கள்
அதாவதுமுதலில் சுதந்திரம் என்றெடுத்து கொள்வோமேயானால் சுதந்திரம் என்பது
நம் அனுபவ அறிவு அதாவது மற்றவர் கூறி கேட்டு அல்லது அந்த மற்றவர்களுக்கு மற்ற மற்றவர்கள்கூற கேட்ட
மட்டமான அர்த்தங்களில் சுதந்திரம் என்பது சர்வாதிகாரத்தில் இருந்து வெளியாகும் ஒரு விடுதலை உணர்வு. அதாவது
யாரும் நம்மை கட்டுப்படுத்தாத ஒரு சுதந்திர நிலை எதனயும்.. யாருக்காகவும்
பயந்தோ கவலை கொண்டோ விரும்பியோ வெறுத்தோ இல்லாத ஒரு பரிபூரண நிலை அதாவது
விடுதலை அதாவது
சுதந்திரம்.அப்படி கிடைக்க பெற்ற சுதந்திரத்தோடு திரியும் ஒரு மனிதனை
பார்த்து நாம் கூறும் முதல் வார்த்தை சர்வாதிகாரி.இதில் சுதந்திரம்-விடுதலை
என்ற அர்த்தத்திற்கு எவ்வாறு? அர்த்தம் கொள்ள முடியும்.இப்படி முரண்பட்ட
பல விசயங்களில். மற்றொன்று.
ஒன்றும்
ஒன்றும் சேர்ந்தால் இரண்டு.இது பள்ளிக்கணக்கு.இதில் உள்ள முரண்
இரண்டு-வேறு கருத்துள்ள இருவர் சேர்ந்தால் இருவரும் ஒன்றாகி விட்டனர்.
என்போம். அல்லது ஒரு மரத்துண்டை அதாவது ஒன்றாய் இருக்கும் ஒரு மரத்துண்டை
வெட்டினால் அதாவது கழித்தால் இரண்டாகும். இதில் உள்ள உண்மை புரிந்தாலும்,
மனதின் அடிப்படையில் சரி.ஆயினும் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து
பார்க்கும் போது சரியாகுமா?என்பது நம்முடைய மற்றொரு
கேள்வியாகும்.ஒன்றாயிருந்து ஒன்றாய் உணர்ந்து வெவ்வேறாய்
கண்டு,வெவ்வேறாய் உணர்ந்து வெவ்வேறாக பட்டு வெவ்வேறு நிலையில்
வெவ்வேறுவகையில் இருப்பதனால்...,இந்த முரண். முதலில்,இதை 
களைவோம் அதை களைவோம் இதை மற்றவர்களுக்கு தெரிவிப்போம்.அல்லது புரிய வைப்போம்.என்ற எல்லாமும் அறிவீனமே. இக்கணமே கவனமாயிருத்தல் தவிர அதாவது
அறிதல் இயக்க இயங்கி இயக்கமாகி இணங்குவதே.
பிரார்த்தனை சரணாகதி இப்படி எல்லாம்... எல்லாமும்.....
எல்லாமுமாய்.







No comments:
Post a Comment