மன்னிக்கவும்
நாளை
நீ
மனைவியாகவும்
ஆகலாம்.
அப்படியானால்?
என் பாதி நீ
அன்புள்ள அரசிக்கு !
என் தேகச்சூட்டிற்க்கு
நான் பயன்படுத்திய மாட்டில். என் இதய வாசலிலும் கோலமிட்ட காரணத்தால்
என் அன்பே... உனக்கொரு சாசனம்.
இந்த இனிமையான
தருணத்தை
திரும்ப நினைவு கூறாதே -
மாறாக/
நாளை நீ விரும்பியவுடன் நாளை மறுநாள்
வேறொரு நன் மகனோடும்
மற்றொரு நாள்
இன்னும் நல்ல ஆணோடு
என காலம் வெல்.
காமம் கொள்(ல்)
அதாவது ரசி.
காமமும் காதலும் அதாவது
கலவியும் கல்வியும்
வெவ்வேறல்ல
சினேகிதியே...
ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் கேட்டரிந்ததே.
அறிந்த பின் கேள்.
இதுவே நான் மயங்கிய
இந்த மாலைப்போழுதின்
சொர்க்கச்சான்றின் சாசனம்
பெண்ணே
இன்னும் கேள்.
நீ பன்முக திறமை கொண்டவள்
நானும் தான்
பயிற்சி பெறு.
காதல் என்பது கற்ப்புச்சார்ந்ததல்ல
முதலில் கற்ப்பென்பது சுதந்திரத்தின் இன்னொரு சொல்.அப்படியானால்,அது அடிமைத்தனத்தின் இன்னொரு முகவரி
ஆம்
தீமை என்று ஏதுவுமில்லை
கெடுவதென்பது இதற்குள் இல்லை.
கெட்டுவிட்டதின் பொருள்
வளர்ச்சி இல்லா நிலை
அது
பட்ட மறக்கிளையானாலும்
இங்கே
உயிர் அல்லவா வளர்கிறது?!...?
பேதம் களைவது
ஆணாயும் - பெண்ணையும் அல்ல
ஆணும் பெண்ணும்.
வாசித்தலில் பொருள், வழங்கும் புத்தகமாயிறு
புத்தம் புதியதாய்
புத்தகமும் படி
பொருள் - விலகும்
பின் விளையும்
இதுவே
விசுவாசம்.
உழுதவருக்கும் தெரியாது களைபிடுங்குவதில் தான் களைப்பு ஏற்பட்டதென்று. வேண்டாமென்றேன ஒதுங்குவது தீண்டத்தகாத செயல்.
பிடித்தவற்றை கிடைக்காதென்ற
நிலையில்
விருப்பமும் கடவுளும்
நண்பன்
நம் காமத்தை போல ...
ஆக..
காமம் பழகு.
கருத்தரிக்க
கருத்தறிந்து
கலவி கொள்..
செய்தலிலே
புகுதல் - என்ற புலனறியா -
தத்துவ -விளக்கம்
இது
தவக்கூடம்
ஆம்
நம் மேனி என்பது மெய்யென்று - மேன்மை கொள்வாய்
தேகம் காமத்திற்காக..
யாகத்திற்காக..
யோ
தீராத அமிர்தத்தை
தீர்ந்துவிடுமென்று திரும்பி விடாதே...
வற்றுவது - வளத்திற்காக..
தீர்ந்து போவதும் தேவைகளுக்காக..
தேவைகளை விருப்பமாக்கு
விருப்பத்தை இருப்பாக்கு
அவ்விருப்பத்தில்
உண்மை உணர்
உண்மை உண்
காம தவம் போற்று ..
எந்நாளும்
காதலியாய்
எல்லையில்லா
காதலுமாய்..
|
iif u want visual,go 2
newaytha@youtube.com/
reeditremix@youtube.com





No comments:
Post a Comment