Saturday, 17 March 2012


E றை அருள் ஒளியில்  
N அறியாமை இருள் விலக 
N ங்களின் ஆட்சி-அதிகாரம்    
E ரை என்பதிற்க்குள் சுருங்காமல் 
M பெருமாள் அந்த பெருங்கருணையாளன் 
K ட்க்காமல் வழங்கிய 
     

              இந்த 
     மகத்தான வாழ்வில் 
         மேன்மையான    
          சிந்தனை வழி...  




N பெருமை அகன்று 
M பாக்கியங்களில் 

K டு,நினைக்காதவர்கள் 
A ல்லோரும் நற்சமுதாயமாக 
M பிரான்-சத்தியத்தை 
A நாளும் கருத்தில் கொண்டு  
L ல்லா நிலங்களும்,நிலத்தில் உள்ள   
R களும், நமக்காக 
A ல்லை இல்லா-இந்த 
J கத்தை படைத்த 
  


படைப்பாளனின்
  நன்றியோடு ஓர்ந்திருப்போம்     




மந்திரமும் 
தந்திரமும் ஒன்றே,
விதைத்தது அதாவது 
விதித்ததை 
நம் அற்ப அறிவில் அறிந்த மடமைகளை கொண்டு விதிப்பது.
ஆக 
தற்கால எந்திரன் எனப்படுவதும், 
மந்திரமும் தந்திரமும் ஆக ஒன்றே! 
படைப்பாளன் மிகுந்த நுண்ணறிவாளன்    
பரந்த நோக்குடன் நம்மை பராமரிப்பவன்.
தன்னால் 
தமக்கு நேர்ந்தத்தையும் 
நேர்ந்ததால் - விளைவதையும் 
பிரித்தரிவிது-பின்-அறிவிப்பவன் 
அதாவது உணர்த்துபவர் 
மிக்க கருணையாளன். 
அந்த மாபெரும் அருட்கொடையானின் 
அற்புத சாட்சியங்களில் ஒன்று.

நம் இருதயம். 
அதாவது 
இறைவன் இருப்பிடம். 

வேடிக்கை காண்பது வேடிக்கை காட்டுவது 
இரு வேறு நிகழ்வுகள் அல்ல-

காண்பன-காண்பது-காண்க என்ற 
தத்துவ விளக்கம்-மறுபுறம் இருக்க, 
அதில்-மடமைகளை விடுத்து.
வேடிக்கை காண்பது 
காட்டுவது 
வெவ்வேறு  
வினைகளாக 
அதாவது கர்மங்களாக 
அதாவது 
வெவ்வேறு செயல் அவ்வளவே.. 
இதில் உள்ள பொருட்குற்றம் 
பொருளின் அடிப்படையில் நாம் பார்ப்பதால்.. 

இன்னொரு உதாரணம் 
நியாயமாக ஒருவர்
தருவதும்-
மற்றொருவர் 
பெறுவதும் போல

நீதிக்காக ஒருவர்
பெறுவதும் - 
இன்னொருவர்
தருவதும் - போல.

ஆக ... கொடையாளனின் அருட்கொடைகள்
ஆனந்தமயமானது
இன்பப்பூர்வமானது
சுகானுபவமானது
மகிழ்ச்சி வடிவிலானது 
என
நுண்ணரிவாளனின் சிறப்பு
மேன்பட்டது -
அந்த மேன்மைகளை உணர்தலே 
மேற்சொன்ன
வெவ்வேறு வார்த்தை வடிவிலான
அத்தனை அர்த்தங்களும்.
ஆக-அடிப்படை
ஒன்றே-
எல்லாம் அவன் செயல்-
இதில் 
நாம் 
ஆனந்தப்படும் முயற்சியை விட்டு 
அர்த்தம் நோக்கும் ஆராய்ச்சியின் விளைவே 
அதாவது 
கடமை தவறுதலே-
பாதை மாறுதலே-
கவனம் தடம் மாறுதலே.

பாதுகாக்கும் 
அந்த பரம் பொருளின்
கருனைகளின் பால்-
நம் கவன ஈர்ப்பு
எவ்வாறு தடம் புரளும்?

ஆசை.

அதற்க்கு முன்
இதுகாரும் அல்லது இப்பவரைக்கும்

என்னை இயக்கி-எல்லாமுமாக
என்னை மகிழச்செய்து - மனம் கொள்ள வைத்து
ஏகாந்த உணர்வில் மூழ்கி,
தளைத்து 
தளைத்தலில்- சிலிர்த்து-சிலாகித்து என
சிந்தனையுள்இத்தனையையும் செதுக்கி-
செப்பனிட்டதே,
மன்னிக்கவும்.
செப்பனிடுதலே இனிவரும் விளக்கமும்.
ஆக
ஆசையை 
அதாவது
ஆசையை நம் மனதில் பதியமிட
செய்தவனின் பாரம்பரியம் உணராமல்
அதாவது
பக்குவப்படாமல்
பேராசைகொள்வது 
அதாவது
அனுபவித்த அனுபவங்களில்...
கடந்த 
சுகங்களையே 
மீண்டும் விரும்புவது 
அல்லது
தனக்கு மட்டுமே இத்தனையும்
என்று இறுமாப்பு-
இதன் வெவ்வேறு வடிவங்களே
கௌரவம்-பெருமை -புகழ்-பொறாமை
சூது பயம் பதட்டம் 
என கவனம் தடுமாறுதலின்
அதாவது 
நற்பாதை மாறுதலின் தீங்கு.

பொறுமை எனும் 
அளப்பறிய பொக்கிஷத்தை 
தொலைப்பது.
தொலைப்பதே தெறியாமல் 
தொலைப்பதில்
நாம் மூழ்கியாதே-
நம் அறியாமை. 

கடக்க முடியாத 
அடர்ந்த காட்டுக்குள்...

அறியாமை இருளில்
முயற்சி என்றும்
இலட்சியம் என்றும்.


அர்த்தமில்லாத 
வெற்றுக்கற்பனைகளில்
புதையுண்டு.

புனர்ஜென்மம் அறிந்தோம்
இனி
புணரபோகும் ஜென்மமும் அறிவோம்
என 
மார் தட்டி
தம் கரங்களாலே 
நாம்
சிக்குண்டு கொள்வதே...

மந்திரம்-தந்திரம்-எந்திரம்
வித்தை-வேட்டை-வேடிக்கை

ஒவ்வொரு கனத்திலும்
நம் சிந்தனை வளத்தில்...
அருள் செல்வத்தில்...

சீர்தூக்கி பார்த்து
சிறப்பித்து பார்த்தாலும்
நம்மை இழுத்து பின் - 
விட்டு
இயக்கும் 
இந்த இயக்கத்தின்
இயங்குதலை உணரும் 
ஆற்றல்
அற்ற, 
அற்ப அறிவு கொண்டு.

நம் தேவைகளை,
நமது 
தேவைகளாக்கி.
நம்மை 
அந்த தேவைகளில்
விருப்பம் கொள்ளச் செய்யும்
அக்கருவுலத்தில்
அந்த 
ஆதி மூலத்திடம்

அது-
இதுவோ-அதுவோ 
என்று
அறியாத நிலையில்
விண்ணப்பிப்பது
ஒரு குற்றம்.

விண்ணப்பிக்க - 
விண்ணப்பத்தை நிராகரிக்காமல்
தடுக்க 
என நம்முடைய
அதிகாரப்பூர்வமான அறிவே
இந்த
அற்பத்தனமான
மந்திரம் எனப்படுவது.

இதிலிருந்தே மற்ற 
தொந்திரவுகள்.
மண்ணிக்கவும்
தந்திரங்கள்-எந்திரங்கள் 
என 
நம்
தர்திரியங்கள்  பெருக
நம் அழிவு 
மறுபடியும்
மண்ணிக்கவும் 
நம் அறிவு 
நம்மை வழி கெடுக்கிறது.

அருட்கொடையாளன்
அந்த 
பெருங்கருனையாளனின்
ஜீவசக்தி,
இந்த 
அற்பமான அறிவை
கட்டுப்படுத்ததோ?
அப்படி 
கட்டுப்படுத்த முடியாமல் 
போனால்
அந்த அறிவு
மகத்தானதா? 
மடமைகளில் சிறப்பானதா?

வார்த்தை ஜாலங்களிலும்
வழக்காடும் சொல்லாடல்களிலுமே 
நாம் சிக்குண்டதாலேயே 
இந்த கேள்வியும்-
ஆக 
நுண்ணரிவாளனின் வேதம் 
இன்னும் பிரித்தறிந்து 
பின் 
உணர்ந்து இறை ஒளியை 
நெருங்கவே, இன்னொரு விளக்கமும்.
ஆக 
நம் 
சிந்தனைச் செல்வம் குறைந்து 
அதாவது 
சீரிய சிந்தனை மறைந்து 
கூரீய கற்பனை 
இத்தனைக்கும் என்றாலும் 
சற்று விளக்கமாக 
விளங்குவோமேயானால் ... 
அதற்க்கு முன் 
நாம்  
உணர்ந்ததை மற்றவர்க்கு 
உணர செய்ய 
நாம் ஏன்? 
இறை உணர்வே போதுமே 
அதுவே தமக்கும்.
மற்ற எல்லோருக்கும். 
இப்படி இருக்க -
இப்படி இருப்பதனாலேயே 
இறைவன் 
இந்த குறைபாடுகளை களையவே.. 
அதாவது 
விருப்பங்களில் - 
இன்பங்களில் என 
ஒவ்வொரு மனிதனின் 
மாற்று ரசனைக்காக 
ஏற்படுத்தி தந்த 
நற்குணங்கள் 
ஆசை என்று,
பேராசை என்று 
வெவ்வேறு படுத்தி வெகுண்டெழுந்ததால்- 
வேறு வேறுபட்ட 
வெகுசிலரில்-
அச்சிலரில் 

சிறப்பானவர்களில் -
அதாவது 
இருதயம் சிறப்பானதாக -தூய்மையானதாக 
அமைதியானதாக-
என 
இறைவனின் பொக்கிஷமான பொறுமை உள்ள மனிதரிடத்தில் 
உணர்வுகளின் வாயிலாக அறிவித்து-
அவர்கள் 
பின் அறிவிக்க வேண்டியே  
மொழி ஒன்றை ஏற்ப்படுத்தி-
அந்த மொழிக்கு 
ஒரு வடிவம் தந்து 
அந்த வடிவத்தை  
எழுத்தோவியமாக வரைந்து.
அதில் 
எண்ணற்ற வார்த்தைகளை கொண்டு எண்ணிலடங்கா அர்த்தங்களை உள்ளடக்கி,
அற்புத சிந்தனைகளை
அதற்குள் சீர் பிரித்து 
செதுக்கிய 
வழிமுறைதான் வேதம் எனப்படுவது.
ஆக 
நாம் 
சில வார்த்தைகளையும் 
அதனை கையாளும் முறைகளையும் 
உற்று நோக்குவோமேயானால் 
சத்தியம் புரியும்.
உதாரணமாக..
சீரிய நடத்தை 
இதில் ஒழுக்கம் மட்டும் அல்ல.
ஒழுக்கம் இல்லா வாழ்வு கூடா.
என்ற 
மறை பொருளும் உதித்தாடும்.என்பதாகும்.
அடுத்து 
இன்னொன்று- 
கூறிய கத்தி.
இதில் 
உள்ள விளக்கமும் 
மேற்சொன்ன 
இரண்டு விளக்கங்களுக்கு உரித்தானது.
அப்படி தொடர்ந்த 
சத்திய வார்த்தைகளில் 
அற்புதமென்று 
நாம் கொண்டாடும் 
இந்த 
அறிவை கூட தற்காலத்தில்... 
கத்தியை தீட்டாதே...புத்தியை தீட்டு.
என்பதின் பொருளும் 
பல தீங்கை காட்டும் வெளிர் முகங்களே.. 
அதாவது 
மந்திரம் -எந்திரம்-தந்திரம் வித்தை-வேடிக்கை-வேட்டை என்று 
கேவலம் நிறைந்த 
கேட்டின் துணைக்கே 
அந்த வார்த்தைகளும்.
அதாவது
இறையுணர்வுகளை வெளிப்படுத்த 
இறைவன் ஏற்படுத்தி 
தந்த எழுத்துக்களை 
தவறாக 
நாம் பயன்படுத்தினால் கூட 
சத்தியம் உணர்ந்தவர்கள் 
அதாவது 
இறை உணர்வோடு 
அதாவது படைப்பாளனுக்கு 
நன்றியுணர்வோடு 
இருப்பவர்களுக்கு 
ஆயிரமாயிரம் நறுமணங்கள் 
நம்மை சூழ 
இருந்தும் 
நமக்கு பிடித்த 
நல்ல மனங்களை 
தேர்ந்தெடுக்கும் வல்லமை உண்டு. 
இதுவே பெரும்பாக்கியம். 
ஆக 
விளக்கத்திற்கு வருவோம்.
இன்றைய சூழலில் 
நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியும் 
பெற்றிருக்கும் சுதந்திரமும் 
என 
இத்தனைக்கும் காரணமான 
இந்த அறிவை வீண் என்பதும். 
அற்பமென்பதும்-
அழிவென்பதும் -
என்றால்?
அதனை கூட 
அழிக்க முடியாத சக்தி 
எவ்வாறு மகத்தானதாகும்?
இதுவே கேள்வி.
ஆயினும் 
இடையில் 
வேறு விளக்கங்கள் வந்ததால் 
தாமதமேயானாலும் 
சுற்றி வளைத்து 
எதனையோ திணிக்காமல் 
மீண்டும் கேள்விக்கே வந்திருப்பது 
நிறைவை தந்திருக்கும்.
ஆக 
இதிலேயே விளக்கம் உள்ளது,
சத்தியவான்களுக்கு.
இருப்பினும் விளக்கமாக - 
(எனக்கு புரிய என்னை திருத்த) 
அற்ப அறிவை 
அந்த மாயப்பேயை 
முதலில் 
நாம் புரிந்து கொள்வோமேயானால் 
தனக்கு உண்டானது,
தனக்குண்டென்பதில் 
நம் கவனம் சிதறியதில்...
முதலே...,
ஆசை பின் பேராசை 
என எல்லாமும். 
ஆக 
இறுதியில் 
பயம்-கலக்கம்-பதட்டம் என்பது.
இதில் 
அந்த தீய சக்தி.
அதாவது 
அற்ப அறிவு 
நமக்கு தந்த 
கற்பனை சுதந்திரமே.
நம் இந்த வழிக்கேடு.
புரிகிறதா? 
இல்லை.
அதாவது 
நம் தேவைகளை 
நமக்கு அறிவித்து 
நம்மை விரும்பச் செய்யும் முன்
அந்த நுண்ணறிவாளன். 
விரும்பியபின் 
அனுபவிக்க,
அதாவது 
அனுபவித்தலை 
அனுபவிப்பதற்காக வேண்டி 
அதாவது 
வெறும் 
அவ்வக்கால 
செயல்பாட்டிற்காக வேண்டி 
அதாவது 
தற்கால எந்திரங்களை 
நாம் இயக்க 
நாம் ஏற்ப்படுத்திடும் தகவல் பரிமற்றத்திற்க்குண்டான 
அதாவது 
அனுபவித்த சுகங்களில் இருந்து 
நாளை 
நாம் அனுபவிக்கபோகும் 
வேறு மற்ற 
மட்டற்ற 
அடுத்த 
மகிழ்ச்சியை எதிர்நோக்கிய 
மனப்பான்மை தொட்டு.
அதாவது 
அந்த 
அடுத்த சந்தோசங்களை 
உணரச் செய்ய 
வெறும் செயல் பாட்டிற்க்காக.
[இறைவனுக்கு நன்றி!] 
ஆம்.
உணர்தலின் பின் விளைய வேண்டிய.
செயல்பாட்டிற்கான சக்தியே
இந்த அறிவு.
அற்புதமே ஆயினும். 
இறை சக்திக்கு இணையானதல்ல.     
அதாவது 
இழிவானதில்லை 
என்றாலும்,
இழிவான 
மேற்சொன்ன 
எல்லா இத்யாதிகளுக்கும் 
என 
அதாவது 
பேராசை தொட்டு 
அனைத்து- 
காரியங்களையும் 
உற்பத்தி செய்யும், 
இந்த 
கற்பனையை 
அதாவது 
கற்பனை திறனை.
கற்பனை என்பது சிந்தனைக்கு 
நிகரானதே  என்றாலும்,
உண்மைக்கு எதிரானது.
அதுபோலவே 
திறன் என்பது அறிவாகவும் 
அர்த்தம் கொள்ளப்பட்டாலும்
திறன் தேவைப்படுவது,
இயந்திரத்திற்கு மட்டுமே. 
உணர்வின் அடிப்படையில் 
இயங்கும் மனிதனின் 
அறிவுத்திறனாக 
அழிவு சக்தியாக
மாயப்பேயாக 
உரு கொண்டு 
அந்த 
உணர்வுகளற்ற  
தீயசக்தி-
உருவங்களை கொண்டு 
நம் 
உணர்வுகளை மழுங்கடிக்க 
அதாவது 
கவனம் தடுமாற செய்கிறது.
ஆக 
உருவங்கள் இல்லாத 
ஆனால் 
உணர்வுகளில் காண முடியாத 
அந்த மூச்சு காற்றை போல 
அந்த பரம்பொருள் 
அறிவுத்திறனை குறைக்க ..
அதாவது 
அழிவுப்பாதையில் இருந்து 
நம்மை தடுக்க 
அதாவது 
பாதுகாக்க...
இழந்த பொக்கிஷத்தை 
அதாவது 
அருட்கொடை.
மேலும் 
சத்தியமாக உரைபோமேயானால் வரப்பிரசாதமாக. மன்னிக்கவும்.
இறை அருளாக... 
தருவது-நாம் பெறுவதே.. நோய்-வறுமை.
இவை இரண்டுமே.. 
சுகத்தின் தொடக்கம் 
அதாவது 
சொர்க்கத்தின் வாசல். 
நோய் என்பது தடுக்க வேண்டியதல்ல.
தவிர்க்க வேண்டியது 
நோய் ஒன்றும் குற்றம் இல்லை 
குறைபாடு.
நோய் வெறும் தடுப்பு சுவரே.. 
செல்லக்கூடாத அறைக்கு 
இறைவன் அடைத்துள்ள கதவு. 
மரணம் என்ற ஒன்றில்லை.
நீங்கள் மரணிக்க முடியாதவர்கள்.
என்று நிஜத்தை எடுத்துரைக்கும் நிழல். 
இந்த நோய்.
ஆம்.
நோய் என்பது இறைவனின்கொடை. நோய்களுக்கு முன்னம் 
அதாவது 
முதலுதவி.
அதாவது 
முன்னுரிமைகளின் 
அடிப்படையில் 
அந்த பெருங்கருணையாளன் 
தரும் மற்றொரு 
ஆறுதல் வறுமை.
கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை.
என்ற 
பிற்போக்கு வாதங்களை 
மன்னிக்கவும்.
முற்போக்கு சிந்தனைகளை 
தவிர்த்து 
வறுமைகளில் 
நாம் அனுபவித்து மகிழும் பாக்கியங்களை உணர்வோம். 

வறுமை நிதானத்தின் முதல் தேவை.. 
பொறுமைக்கு மூலம்.
சுகத்தின் வழிதேடல்.
ஆனந்தமயமான 
சுதந்திரத்தின் 
பரிணாம வளர்ச்சி.
இந்த 
வறுமை பேதமைகள் இல்லாதது.
புரட்சிக்கும் 
மறுமலர்ச்சிக்கும் தாய்.
புண்ணியங்களின் ஒன்று.

செல்வங்களில் 
செழித்து தழைக்க 
கற்றுணரும் 
முதல் தவனைக்காலம்.
முதன்மைக்காலம்.
ஆக 
வறுமையே பொற்க்காலம்.
இறை பாக்கியங்களை 
இறை உணர்வுகளையே 
இறைவனையே ஒர்ந்திருக்கும்.. 
ஒரு தவ நிலை.
இந்த வறுமை.
அனுபவித்த 
எந்த நிகழ்வுகளுக்கும் 
நிகரில்லாதது இந்த வறுமை..
ஒவ்வொரு கணமும் 
இறைவனின் அற்புதங்கள் 
அடங்கிய 
அத்தாட்சிகள் அன்றி வேறில்லை 
என்பதின் விரிவே. 

மேற்சொன்ன அத்தனையும்.

அவ்வளவே.
நம் அறிவு திறன் கொண்ட 
நம் முயற்சி 
அனைத்தும் இவ்விரண்டையும் எதிர்த்தே.. நற்சிந்தனையாலர்களுக்கு 
மேற்கூறிய,
கூரீய கருத்து 
அதாவது 
சத்தியம் விளங்கும் 
ஆயினும் விளக்கமாக 
பேதைமை 
அதாவது 
அறியாமை,கவலை,பதட்டம் 
இவைகளுக்கு எதிராக 
ஆயுதம் எடுக்காமல் 
இதனில் இருந்து 
நம்மை காக்க வேண்டிய 
அந்த அறிவுத்திறன் 
அதாவது 
நம் வீட்டு வேலைக்காரன். 
கொள்ளைக்காரனின் நண்பன் 
ஆக முரண்பட்டதின் விளைவே 
நம்மை காக்கும் 
பொருட்டு நமக்கிரு சந்தர்ப்பம் தரும் 
அதாவது 
வறுமை என்றும் நோய் என்றும்,
ஆக 
அதற்க்கு முன் மேன்மைகள் 
விளங்க வேண்டியே 
இடையில் இந்த காரணம்.
அதாவது 
ஒருவனின் 
வறுமையை பார்த்து ஏளனம் செய்வதும் 
அல்லது பரிதாபப்படுவதும் ஒருவரின் நோயை கண்டு வேதனை படுவதும்.
தரித்தரியம் என்றும் இறைவனின்  
தண்டனை என்றும் 
தன் சாபம் பழித்ததற்க்கான சாட்சியே தவிர வேறில்லை என்றும்.
அதாவது 
அடித்தள அறியாமை.
அதாவது 
அதால பாதாளம் என்ற  
புதை குழியில் சிக்கி..
சிக்குண்டது,
தெரியாத வெறும்-
பெரும் செல்வந்த்தர்கள்.
ஆக 
வறுமை 
நோய் 
என்பது 
ஆராதிக்க வேண்டியவைகள் 
நிதானிக்கவேண்டிய தருணங்கள். 
இது 
இப்படி இருக்கையில் 
நம் வாழ்க்கையின் 
பெரும் பங்கு,
ஏன்-முழுமையுமே 
இந்த
நோயுக்கும்,
வறுமைக்கும் எதிர்த்தே. அதாவது 
இதுவே 
நமது முயற்சி 
இலட்சியம் 
இப்படி இத்யாதி பல.
ஆக 
நம் வீரம்,வெற்றி,செல்வம்,பெருமை. 
இப்படி 
அனைத்தும் 
உள்ளடுக்கிய ஒழுக்கம்,
அதனை 
பின்பற்றிய 
நம் நடத்தை 
அதனை கற்று தரும் கல்வி.
கல்வியில் முதன்மை  
என்று நாம் கொள்ளும்  
மருத்துவம்-அறிவியல்-விஞ்ஞானம்-
பொருளாதாரம்-தொலைதொடர்பு  
என எல்லாமும்.
இந்த 
வறுமைக்கும் நோயுக்கும் 
எதிர்த்தே தவிர வேறில்லை பராபரமே.
அதாவது 
அத்தனை நற்சிந்தனைகளும் 
அதாவது 
கல்வியும் செல்வமும் 
சேகரித்த அனைத்து  
கண்டுபிடிப்பு உபகரணங்கள் உட்பட  
நன் வசதிக்குண்டானதல்ல என்றும் 
மாறாக 
இவைஅனைத்தும்
வறுமைக்கும் நோயுக்கும் 
எதிர்த்தே.
அதாவது  

பயந்தே. 
அதாவது 
நம் விளக்கம் இதற்க்குள்ளில்லை. அதற்கப்பாலும். 
அதாவது நம்மை நாம் பெருமை கொள்ளாமல் மற்றவரை 
புகழ செய்ய..
அந்த 
புகழின் மயக்கதிற்க்காக
அந்த வெறும் கற்பனை சுகத்திற்க்காக 
அதாவது 
மறைவான சிந்தனையில் 
நம் உள்ளம் கொண்ட உணர்வுகள் வேறு. 
வெட்க கேடுகள் அடங்கிய 
கற்பனைகள்  
வெளிக்கொணரும் காட்சி சுகம் வேறு.
ஆக
அந்த கற்பனை சுகத்திற்காக 
இறைவன் படைத்தவைகளை 
இழிவானதாக காண்கிறோம்.
இழிவானதை    
இணை என்றும் கொள்கிறோம். 
அவ்வாறு  
அதாவது 
அந்த காலகட்டத்தில்  
பிரித்தரிவித்து  
உணர்ந்து,
பின் வரும்  
சத்தியங்கள் செயலுற வேண்டிய 
நினைவு பதிவகங்கள்   
அதாவது 
முரணாக 
மற்றவரை  வஞ்சிப்பதிலும்  
எல்லாரிடத்திலும் 
எல்லாவற்றிற்கும் 
ஏகமாக 
ஆசைகொள்தல் அதாவது 
தனக்கு 
அடிமைகளாக 
இதில் 
இறை சமத்துவம் 
சீர் கெட தொடங்க 
வறுமை 
நோய் என்ற 
தனதடுத்த கட்ட 
நடவடிக்களுக்கு உட்படுத்த.....         
நாம் நிராகரிக்க...,
கல்விச்சாலைகள் 
மருத்துவமனைகள் என்று 
நமக்கு நாமே 
வெறும் சமாதி கட்டடங்களில் 
சமாதனம் போர்வை போர்த்தி 
அறியாமை பேதமையில் 
சிக்கி 
மந்திரம் என்றும் 
தந்திரம் என்றும் 
எந்திரம் என்றும்
இப்படி இத்யாதிகளில்...... 

கல்வியோ அது கலவியோ பொருள் கிடைத்து, அதற்கீடாக பெறுவதென்பது-எவ்வாறு உத்தமமாகும்.
விபச்சாரம் 
என்நிலையாயினும் 
விபச்சாரமே .. 
நம்பிக்கையை 
அவ நம்பிக்கை கொள்வதும் 
அவநம்பிக்கையில் 
நம்பிக்கை ஏற்படுவதும்-
சத்தியத்திற்கு சோதனை அல்ல-
சோதனை அல்லாத சத்தியம் புலனாக 
அதாவது 
சந்தேகம் இல்லாத 
சந்தோசம் மலர.
அதாவது 
சந்தோசம் காண்பது அல்ல 
மலர்வது 
அதாவது 
மலர்வதை யாரும் காண முடியாது-
உணர்தலிலேயே மலர்வு நிகழும்.
அதாவது 
உணர்தல் என்ற 
காரியம் நிகழ்தல் மலர்தல்.
பொய் தான் உண்மை 
என்றிருக்கும் பட்ச்சத்தில்,
உண்மை காணும் 
காட்சி பொருளாகவே இருக்கும்.
உண்மை காண விரும்பாத 
சத்தியமாக நிலைக்கும்.
உயரிய சிந்தனையில் 
பொய் என்பது ஒரு பொய்யே.. 
கேலி கூத்தே... 
கூத்தாடுவது எப்படி ஆனந்தமாகும்.
கூத்தென்பது-ஒரு தொழிலாழானால்  
குரங்கு வித்தைக்கும் 
பாம்பாட்டிக்கும் உள்ள 
ஒற்றுமையே கூத்திற்கும்.
தானமாக பெற்றாலும் 
தர்மமாக பெற்றாலும் 
பரிதாப கடைமையில்  
நாம் பெற்ற அனைத்து பயன்களும்.,
அல்லது 
நாம் புத்தி என்ற 
திருட்டால் நாம் அபகரித்த அனைத்து செல்வங்களும் பிச்சையே ...
ஆக 
கூத்தாடிகளை 
பார்த்து-சிரித்து-மகிழ்ந்து 
அதாவது 
குரங்குகளை 
அல்லது 
நாமுயர்ந்த படைப்பான மனிதன் என்ற 
நிலை மறந்து குரங்குகள் மன்னிக்கவும் 
கூத்தாடிகளை மதித்து,
அவர்களை-அவர்களாக- மாறுவதை பெருமையாக 
நினைக்கும் 
இக்காலகட்டமும் 
இறை பார்வையில் கேலி கூத்தே.. 

சரசத்தை மையமாக கொண்ட விபச்சரத்திர்க்கும் சரசுவதியை தருவதாக சொல்லும் வியாபாரத்திற்கும் 
பேதமை புரிவது புண்ணியம்-
இறைவன் ஒருவனே நமக்கு போதுமானவன்.

No comments:

Post a Comment